லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட மூன்று பேரில் ஒருவரை அப்பகுதி கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். உத்திரப்பிரதேசம் மாநிலம் கோசாம்பி பகுதியில் பழத்தோட்டத்துக்கு சென்ற 16 வயது சிறுமியின் பின்தலையில் தாக்கிய மூன்று பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆரம்பத்தில் இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாகவும், புகார் அளிக்க வந்தவர்களிடம் தகாத வார்த்தையில் பேசியதாகவும், இரண்டு காவலர்கள் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பிரயாக்ராஜ் மண்டல மூத்த போலீஸ் அதிகாரி சுஜித் பாண்டேவிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட சுஜித் பாண்டே இந்த புகார் தொடர்பாக 5 குழுக்கள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு இளைஞரை இன்று அந்த கிராம மக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். பின் இது குறித்து தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்த அந்த இளைஞரை மீட்டு கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்டவன் 20 வயதான முகமது நஜிப் என்பதும் மேலும் இருவர்களின் பெயர் முகமது சோட்கா மற்றும் முகமது பட்வா என்பதும், இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.